News Update :
Home » » உள்ளாடையுடன் உலாவும் மர்மனிதன்; அச்சத்தில் கிராம மக்கள்

உள்ளாடையுடன் உலாவும் மர்மனிதன்; அச்சத்தில் கிராம மக்கள்

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 18 செப்டம்பர், 2011 | AM 12:25



மன்னார் பெரிய கடை வீதி பெட்டா கிராமத்தில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மர்ம மனிதனொருவன் உள்ளாடை மாத்திரம் அணிந்து வீட்டின் மேல் நடமாடித்திரிந்த மையினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்துடன் கூடிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய கடை வீதி- பெட்டா பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் கிராமத்திற்குள் சென்ற மர்ம மனிதனொருவன் அங்குள்ள வீடு ஒன்றின் முன் மதிலில் ஏறி அருகில் நின்ற முருங்கை மரத்தினூடாக வீட்டின் மீது ஏறி நின்றுள்ளான்.

இதன் போது, வீட்டில் உள்ளவர்கள் திடீரென வெளியில் வந்த போது வீட்டின் மேல் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த மனிதனைக் கண்டு அயல் வீடுகளில் உள்ளவர்கள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு முன் வந்தனர். குறித்த நபர் மரங்களின் மேல் தாவி தப்பிச் செல்வதைப் பலர் பார்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபோதும் சந்தேக நபரை பிடிக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் நான்கு வாரங்களுக்கு மேலாக மர்ம மனிதர்களினால் ஏற்பட்ட அச்ச நிலை குறைவடைந்துள்ள நிலையில் மேற்படி சம்பவம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger