News Update :
Home » » யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளன!

யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று இராணுவ முகாம்கள் மூடப்படவுள்ளன!

Penulis : ۞உழவன்۞ on புதன், 24 ஜூலை, 2013 | AM 10:44

யாழ். மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளது.
இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓகஸ்ட் மாதமளவில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் எனவும், யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில், 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகவும் யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger