இங்கே காணப்படும் புகைப்படங்களில் போராளிகளின் முகம் சிதைந்தும், அங்கங்கள் உடைக்கப்பட்டும், மற்றும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சித்திரவதை அனுபவித்து, இறந்ததையும் காண முடிகிறது. சிலரது கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் உள்ளது. கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ளவரின் புகைப்படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இருப்பினும் இப் படம் தற்போது முழு அளவில் வெளியாகியுள்ளதால் அதனையும் பிரசுரிக்கிறோம்.
போராளிகள் உட்பட ஒரு பொதுமகனையும் இராணுவத்தினர் கோரமாக கொண்டு குவித்துள்ளனர். பலரது அங்கங்கள் சிதறிக்கிடப்பதையும் நாம் இங்கு காணக்கூடியதாக உள்ளது. பெண்போராளிகளின் உடைகள் இங்கும் விலக்கப்பட்டே காணப்படுகின்றன. இறந்த உடலத்தைக் கூட காமவேட்கையோடு மோந்து பார்க்கும் இவர்கள் போன்ற மனிதர்களை இவ்வுலகில் எங்கேயும் பார்க்கவே முடியாது. இப் புகைப்படங்களில் உள்ளவர்களை யாராவது அடையாளம் கண்டால் தயவுசெய்து எம்மோடு தொடர்புகொள்ளவும்.செய்தி அதிர்விலிருந்து
home
Home
+ கருத்துகள் + 2 கருத்துகள்
இந்த கொடூர செயலை செய்தவர்களை இதை போலவே பலி வாங்க வேண்டும்,
அப்போதுதான் உயரின் மதிப்பு இவர்களுக்கு புரியும். மனித அரக்கர்கள் சிறிலங்கா படைஇல் தான் இருகிராகள்.
என்ன கொடுமையான செயல் இது . இவர்களுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் . தமிழர்கள் முன்னிலையில் அந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும் .
இவன் தமிழன்
செந்தில்
இலங்கைக்கு அழிவே இல்லயா?
கருத்துரையிடுக