வட மாகாணத்தில் அமைந்திருக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பல அலுவலகங்கள் எதிர்வரும் நாட்களில் மூடப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் சரசி விஜேரத்தின தமிழ் வின்னுக்குத் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் யாழ்ப்பாணம், வவுனியாக் கிளைகள் மூடப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான காலவரையறை விதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர், ஏற்கனவே அறிவித்தபடி மன்னாரில் அமைந்திருக்கும் கிளை இம்மாதத்திற்குள் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கிளை அலுவலகங்கள் மூடப்பட்டாலும் அதன் செயற்பாடுகள் கொழும்பிலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் சரசி விஜேரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.
home
Home
கருத்துரையிடுக