யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள மிகவும் பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று காலை மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சின்னராஜ நாகரத்தினம் (வயது 76 ) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றபோது தவறி கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.
home
Home
கருத்துரையிடுக