
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்தியஅரசு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாளை நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.
இது குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததை தில்லி தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தி்ல வழக்குத் தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நாளை நடைபெறுகிறது. இதில், வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.
பின்னர், மாலை 6 மணியளவில் புதுச்சேரி மாநிலத்தில், சிங்காரவேலர் சிலை அருகே நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
home
Home
கருத்துரையிடுக