இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நோக்கில் அரசுடன் நடத்தி வரும் பேச்சு நகர்ந்து செல்லும் போக்கு திருப்திகரமாக இல்லையாம் என்று இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையிட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்குழு, நேரடியாக இந்தியத் தூதரகம் சென்று தூதர் அசோக் கே.காந்தை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பினர் தெரிவித்த விடயங்கள் குறித்து டில்லிக்கு தான் விளக்குவார் என்று தூதர் அசோக் கே.காந்த் தெரிவித்துள்ளர்.
home
Home
கருத்துரையிடுக