
நடிகரும், மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரின் வீட்டில் கடந்த 5 ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பலினர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் எஸ்.வி.சேகர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நாத்திகன் (வயது 25), சரவணன் (26), தாமரைக்கண்ணு (24), ஸ்டீபன் (25), விநாயகம் (26) ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
home
Home
கருத்துரையிடுக