
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை இன்று தமக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
இதனால் சிறிலங்கா விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
முதல் இணைப்பு
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை விரைவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நகர்வு சிறிலங்காவை அனைத்துலக விசாரணைகளுக்குக் கொண்டு செல்லக் கூடும் என்று ‘வொய்ஸ் ஒவ் அமெரிக்கா‘ தகவல் வெளியிட்டுள்ளது.
கடந் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் அடுத்த சில நாட்களில் கையளிக்கலாம் என்றும் ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்ததுடன், இதுபற்றி விசாரிக்க அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதிக்க இணங்கிய பின்னரே ஐ.நா பொதுச்செயலரால் விசாரணை ஒன்றுக்கு ஆணை வழங்க முடியும் என்றும் ‘வொய்ஸ் ஒவ் அமெரிககா‘ தகவல் வெளியிட்டுள்ளது.
home
Home
கருத்துரையிடுக