News Update :
Home » » பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளார்

பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளார்

Penulis : Antony on வியாழன், 25 மார்ச், 2010 | AM 9:20

அயர்லாந்தின் கத்தோலிக்க பாதிரிமாரால் பல தசாப்தங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தவறாக நடாத்தப்பட்டவர்களிடம் பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இந்த ஊழல் காரணமாக திருச்சபை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்து வெட்கத்தையும், வேதனையையும் வெளியிட்டிருக்ககின்றார்.
அயர்லாந்தின் கத்தோலிக்கர்களுக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ள அவர், '' நீங்கள் மிகவும் மோசமான துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள், நான் உண்மையிலேயே அதற்காக மன்னிப்புக்கோருகிறேன்'' என்று கூறியுள்ளார்.

இந்த துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை கையாள்வதில் அயர்லாந்து திருச்சபைத் தலைவர்கள் கடுமையான தவறுகளை செய்திருக்கிறார்கள் என்று கூறியுள்ள பாப்பரசர், நம்பிக்கையை நிலைநாட்ட இந்த விடயத்தில் வத்திக்கான நேரடியாகதத் தலையிடும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அவரது இந்தக் கடிதமானது இந்த விவகாரத்தில் வத்திக்கானின் பொறுப்பை ஏற்கவில்லை என்றும், அயர்லாந்து திருச்சபையின் தலைவரை அது பதவி விலகக் கூறவில்லை என்றும் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கான குழு ஒன்று இந்த கடிதம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger