இங்கே இருக்கும் பொதுமக்களுக்கு என்ன ஆனது?
Penulis : Antony on செவ்வாய், 7 டிசம்பர், 2010 | AM 11:18
முன்நாள் கட்டளைத் தளபதி ஜெகத் டயஸ் தலைமையின் கீழ் இளைஞர்களும் சில பொதுமக்களும் நிலத்தில் இருத்தப்பட்டுள்ள இக் காட்சி அடங்கிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் பல சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் பொதுமக்களையும் இளைஞர்களையும் இவ்வாறு ஏன் நிலத்தில் இருத்தி வைத்திருக்கின்றனர் என்ற பெரும் கேள்வி இங்கே எழுந்துள்ளது. தற்போது இந்த இளைஞர்களும் பொதுமக்களும் எங்கே? இவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லை கொலை செய்யப்பட்டுள்ளனரா என்பது போன்ற விபரங்கள் இதுவரை எவருக்கும் தெரியாது.
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தற்போது ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் துணைத் தூதுவராகப் பதவியேற்று உள்ளார். கடந்த யுத்தகாலப் பகுதியில் இவர் பல பொதுமக்களைக் கொலை செய்யக் காரணமாக இருந்த முக்கிய போர்க்குற்றவாளியாகக் கருதப்படுபவர். யேர்மன் மக்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும். போர் குற்ற ஆதாரங்கள் பல வெளியாகியுள்ள நேரத்தில் இது தொடர்பாக ஜேர்மன் அரசுடன் தமிழர்கள் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, இப் போர் குற்ற காட்சிகளைச் சமர்ப்பிக்கவேண்டும்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக