
மன்மதன் அம்பு படத்துக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன், டைரக்டர் செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளார்.
சினிமாவில் பரிசோதனை முயற்சியாக படமெடுக்க திட்டமிட்டிருந்த கமல், தற்போது'புது தலைமுறை இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற தயங்குவதில்லை.
டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 'வேட்டையாடு விளையாட்டு' படத்தில் நடித்தார்.
படமும் பரபரப்பாக பேசப்பட்டு, வெற்றியடைந்தது. தனுஷ்-ஆண்ட்ரியா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படம் வெளியான பின்,மே மாதம் முதல் உலகநாயகனின் படத்தில் கவனம் வைப்பாராம்.
இன்றைய சினிமா ரசிகனின் ரசனையை புரிந்து வைத்துள்ள, வித்தியாசமாக படம் பண்ணும் டைரக்டரிடம் பணியாற்ற உலகநாயகனும் தயாராக உள்ளாராம்.
செல்வா படத்தின் ஸ்கிரிப்ட் முழு வடிவம் பெற்ற பிறகு,கணிசமான பட்ஜெட்டில், ஆறு மாதத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றது.
கருத்துரையிடுக