போர்க்குற்றம் என்ற பெயரில் எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து மின்சார நாற்காலியில் அமரவைக்க சிலர் துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சே.இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கையில்,
பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுகிறது.
அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன.
இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
படைவீரர்களைப் போன்றே விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன்.
இன்று சிலர் என்னை மின்சார நாற்காலியில் அமரவைத்து தண்டனை கொடுக்க துடிக்கின்றனர், தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்றார் மகிந்த.
home



Home
கருத்துரையிடுக