News Update :
Home » » பாலியல் உறவால் வயோதிபருக்கு வந்த வினை _

பாலியல் உறவால் வயோதிபருக்கு வந்த வினை _

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 3 பிப்ரவரி, 2012 | AM 1:46

விலைமாதுடனான பாலியல் உறவின் போது தன்னையறியாது செயற்கைப் பல் தொகுதியை விழுங்கியதில் 74 வயதுடைய வயோதிபரொருவர் மரணமடைந்த சம்பவமொன்று தாய்வானில் இடம்பெற்றுள்ளது.

பல வருடங்களாக மனைவியைப் பிரிந்த வாழும் மேற்படி வயோதிபர் தனது நெருங்கிய பெண் நண்பியொருவருடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவதினமன்று 62 வயதுடைய விலைமாது ஒருவருடன் சுமார் 30 நிமிடங்களைக் கழித்த பின்னர் விலைமாதுக்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு ஆடைகளை அணிந்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.

மயக்கமடைந்த இவர் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் இறந்து விட்டதாகவும் செயற்கை பல் தொகுதி தொண்டையில் சிக்கியதனால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ___
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger