பாகிஸ்தானுடன் நெருக்கத்தை அதிகரிக்க விரும்புகிறோம் – இலங்கை உயர்ஸ்தானிகர்!
Penulis : ۞உழவன்۞ on வியாழன், 5 ஏப்ரல், 2012 | AM 6:33
பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இலங்கை அதிக ஆர்வம் கொண்டுள்ளதென பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஜயலத் வீரகொடி தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் அரசியல் ரீதியில் சிறந்த நட்புறவைக் கொண்டு இயங்கி வருவதாகவும் வர்த்தக நடவடிக்கையிலும் இதனை கடைபிடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ராவல்பண்டியில் புதன்கிழமை (04.04.2012) இடம்பெற்ற பாகிஸ்தான் வர்த்தக சங்கத் தலைவர் ஜவாத் அக்தார் பாத்தியுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசிய வலயத்தில் உள்ள பெரிய நாடுகளான பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவுகள் வலய மட்டத்தில் நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஜயலத் வீரகொடி கூறியுள்ளார்.
இலங்கை பாகிஸ்தானில் முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் பாகிஸ்தான் வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து சந்தை கேள்விகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானும் இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள போதும் இரு நாடுகளுக்கும் இடையில் மிகக்குறைவான $344 மில்லியன் தொகை வர்த்தகமே இடம்பெற்று வருவதாக பாகிஸ்தான் வர்த்தக சங்கத் தலைவர் ஜவாத் அக்தார் பாத்தி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கை – பாகிஸ்தானுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக