புலிகளுக்கு வரி செலுத்திய தெற்கு வர்த்தகர்கள்?
Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 9 ஜூன், 2013 | AM 1:56
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரி செலுத்திய தெற்கு வர்த்தர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் புலிகள் செயற்பட்ட காலத்தில் இவ்வாறு தெற்கு வர்த்தகர்கள் வரி செலுத்தியுள்ளனர்.
புலிகளின் வரித் திட்டத்திற்கு அமைவாக பொருட்கள் சேவைகளை விற்பனை செய்த 93 தெற்கு வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலிகளினால் கோரப்படும் பொருட்களை தேவையான நேரத்தில் தேவையான இடத்திற்கு இந்த வர்த்தகர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
புலிகளின் வரி முறைமைக்கு அமைய பொருட்களுக்கு விலையிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 400 ரூபா பெறுமதியான அஸ்பெஸ்டோஸ் சீட் ஒன்று புலிகளின் வரி 400 ரூபா சேர்த்து 800 ரூபா என விலையிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொருட்களை அனுப்பி வைக்க எட்டு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக