News Update :
Home » » 21ம் நூற்றாண்டின் பேரவலம்

21ம் நூற்றாண்டின் பேரவலம்

Penulis : Antony on ஞாயிறு, 27 செப்டம்பர், 2009 | PM 1:43


21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலம் இலங்கையில் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு மாதங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையிலும் பெருந் தொகையான அப்பாவி பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய பிரதேசத்தில் பிறந்த ஒரே குற்றத்திற்காக அகதிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளினால் அவதியுற்றதாகவும், தற்போது அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் அவதியுறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகளிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கிய சொந்த அரசாங்கத்திடமே மக்கள் கொடுமைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அகதி முகாம்களிலிருந்து சுமார் 10000 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எங்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்பதே அகதிகளின் முதன்மைக் கோரிக்கையாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வகட்சி பாராளுமன்றக் குழு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அதிக எண்ணிக்கையிலான மக்கள் கடந்த காலங்களில் நிலக்கண்ணி வெடிகளுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவ்வாறு நிகலக்கண்ணி வெடிகளினால் பாதிப்பு ஏற்படும் என்றால் அகதிகள் சொந்தங்களுடன் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் : Antony
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger