News Update :
Home » » தமிழர்கள் கடத்தல் தொடர்கிறது

தமிழர்கள் கடத்தல் தொடர்கிறது

Penulis : Antony on ஞாயிறு, 27 செப்டம்பர், 2009 | PM 1:35


சவூதி அரேபியாவில் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றியபின் நாடு திரும்பிய தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுளார். இது குறித்து அவரது உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புனித ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகாலிங்கம் பிரசாத் என்பவரே காணாமல் போயுள்ளார். இது குறித்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினரிடமும் முறையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்ட பிரசாத் 17 ஆம் திகதி காலை 8.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். இதனை விமான நிலைய தகவல் பிரிவினரும் காவற்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இவர்; தனது இருப்பிடத்துக்கு திரும்பாததனையடுத்தே அவர்களது உறவினர்கள் உரிய முறையில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் : Antony
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger