Home »
» ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்!
ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்!
Penulis : Antony on செவ்வாய், 22 செப்டம்பர், 2009 | PM 1:27
சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டையில், அரசாங்க அமைச்சர் ஒருவரால் ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.அம்பாந்தோட்டையில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த பொழுது இவர்களை இடைமறித்த அரசாங்க அமைச்சர் ஒருவர், இருவரையும் தனது மெய்ப்பாதுகாவலர்களின் வாகனத்தில் பலவந்தமாகப் பிடித்துச் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும் வாகனத்தில் வைத்து அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் அம்பாந்தோட்டை சிறீலங்கா காவல்துறை நிலையத்தின் வாயிற்புறத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக