இலங்கையின் வடபகுதி அகதி முகாம்களில் சில வெளிநாட்டு பிரச்ஜைகள் சிக்கியிருப்பதாக பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 12 வெளிநாட்டுப் பிரஜைகள் இவ்வாறு அகதி முகாம்களில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர்களில் அநேகமானவர்கள் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், அவுஸ்திரேலியர்கள், ஜெர்மனியர்கள், இந்தியர்கள், கனேடியர் மற்றும் நோர்வேப் பிரஜைகள் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்களை விடுவிப்பது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் ஏற்கனவே பேச்சுவார்த்கைதளை ஆரம்பித்துள்ளன.பாகுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மட்டுமே வெளிநாட்டு பிரஜைகளை விடுதலை செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளுடன் குறித்த நபர்கள் தொடர்புகளைப் பேணினார்களா என்பது குறித்து ஆராயப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பிரஜைகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என தூதரகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
தகவல் : Antony
கருத்துரையிடுக