News Update :
Home » » எழுநூறு முன்னாள் போராளிகள் விடுதலை

எழுநூறு முன்னாள் போராளிகள் விடுதலை

Penulis : Antony on சனி, 9 ஜனவரி, 2010 | PM 12:41


புனர்வாழ்வளிக்கப்பட்ட,713 தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இவர்கள் வவுனியா, புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவர்கள் சிறுகுற்றங்களில் ஈடுபட்டுள்ளமை காரணமாகவே இவர்களை விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில், சிறுவர் போராளிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை. இவர்கள் விடுதலை செய்யப்படும் முன்னர் இவர்களை விசாரணை செய்ய விசாரணைக்குழு ஒன்றை அனுப்பக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை நேற்று முன்தினம், கொழும்பு பிரதான நீதிவான் ஜானகி ராஜரட்ன நிராகரித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் இல்லையென்றால் அவர்களை விடுவிக்கவேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
எழுநூறு முன்னாள் போராளிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் இன்றைய தினம் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செட்டிக்குளம் முகாமில் வைத்து அவர்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன்படி சுமார் 712 பேர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாக தொடர்பு அற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 100 பேர் வரை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 429 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger