News Update :
Home » » இலங்கை சபாநாயகர்மீது செருப்பு வீச்சு

இலங்கை சபாநாயகர்மீது செருப்பு வீச்சு

Penulis : Antony on சனி, 9 ஜனவரி, 2010 | PM 12:49


மயிலாடுதுறை அருகே இலங்கை சாபநாயகர் லொக்கு பண்டார அவர்கள் சென்ற கார் மீது சிலர் செருப்புகளை வீசியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை சபாநாயகர் லொக்கு பண்டார, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரது கார் மீது சிலர் செருப்புகளை வீசியுள்ளனர். இதில் சாபாநாயகர் மகன் மீது பலத்த அடி விழுந்தது. இதையடுத்து சபாநாயகர் மற்றும் அவரது மனைவி காரை விட்டு இறங்கவில்லை. சாமி தரிசனம் செய்யாமல் அவர்களை மதிமுக விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger