News Update :
Home » » பாடகி சஹோலிக்கும் மகிந்தவுக்கும் தொடர்பு

பாடகி சஹோலிக்கும் மகிந்தவுக்கும் தொடர்பு

Penulis : Antony on சனி, 9 ஜனவரி, 2010 | PM 2:35


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட வணக்கம் மாமன்னரே ! என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகே இரகசியமான இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள்முதல் மகிந்த இவருடன் சில ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. இப் பாடகி மீது மகிந்த விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல் தொலைபேசி இலக்கதை கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத் தெரியவந்துள்ளதாம். இதனையடுத்து ஷிராந்தி ராஜபக்ஷ ஆத்திரமடைய, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் இந்தப் பாடகிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவிற்குப் பயந்து இரகசியமான இடமொன்றில் இப் பாடகி மறைந்து வாழ்வதாக அறியப்படுகிறது.பாடகி சஹோலி கமகே இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பில் இருப்பதாகவும், இவரை நாமல் ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் கூறப்படுகிறது. குறித்த பாடகியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவிற்கு அறிவித்திருக்கும் ஷிராந்தி ராஜபக்ஷ, இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற விளம்பரத் தொடரில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger