
ஒரு சில ஆடைகளின் துண்டுகள், சில வெற்றுத் தோட்டாக்கள் என்பன தவிர முக்கியமான எந்தத் தடயமும் இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டவில்லை என்பதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் கூறுகின்றன.
ஏராளமானோர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து ஒரு சில எலும்புத்துண்டுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளமை விசாரணையாளர்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.
ஆரம்பத்தில் அந்த இடத்தில் 26 படை வீரர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வந்த அரசாங்கம் தற்போது 16 பேரின் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.
இருந்தும் தோண்டியெடுக்கப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில் டீ.என்.ஏ பரிசோதனை மூலம் அவற்றை இனங்காண்பதென்பது வெறும் வார்த்தை ஜாலம் என்பதாக சட்ட மருத்துவத்துறை நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக