
யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபி யாழ்ப்பாணம்-காங்கேசன் துறை வீதி விஸ்தரிப்பின்போது உடைக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி விஸ்தரிப்புத் திட்டச் செயற்பாட்டுக்கான எல்லைப் பரப்புகள் அடையாளம் இடப்பட்டுள்ளன.
சீன அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கும் இவ்வீதி அகலிப்புத் திட்டத்துக்குள் மேற்படி நினைவுச் சின்னத்தின் ஒரு பகுதி அகப்பட்டு உள்ளது.
இவ்வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலில் அழிக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுச் சின்னம் இருக்கும்.
கருத்துரையிடுக