இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்-முன்னாள் இராணுவத் தளபதி
Penulis : Antony on திங்கள், 13 டிசம்பர், 2010 | AM 6:33
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகள் மீண்டுமொரு பிரபாகரனை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
சிறையிலிருந்தவாறு நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்திப்பட அரசியல்வாதி போன்று தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கியொடுக்க முனையும் ஜனாதிபதியின் செயற்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது.
தன்னையும் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.
எந்தவொரு அரசியல் தலைவராவது தனது அரசியல் எதிராளிகளுக்கெதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பாராகில் அவர் ஒரு கோழையாவார். அத்துடன் தனது எதிராளிகளை சிறையில் தள்ளும் அரசியல் தலைவர் ஒரு சர்வாதிகாரியாவார்.
ஜனாதிபதியின் இன்றைய செயற்பாடுகள் யுத்தம் காரணமாக பாதிப்புற்றவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரப்போவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களை மென்மேலும் துன்புறுத்தவே செய்யும்.
அவ்வாறான நிலை தொடரும் பட்சத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் என்றும் அவர் தன் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக