இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் யுத்த குற்ற விசரணை
Penulis : Antony on வியாழன், 9 டிசம்பர், 2010 | PM 4:52
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றம் தொடர்பில் சர்வேதச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் புதிதாக ஔிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியை கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் ஔிபரப்பப்பட்ட காணொளியின் நீட்டிப்பு காணொளி என குறிப்பிட்ட காணொளி ஔிபரப்பப்பட்டுள்ளது. அக் காணொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொலைகாட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாராயின் ஔிபரப்பப்பட்ட காணொளி சித்தரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக