News Update :
Home » » கோபக்காரர்களை இணைத்த "களவாடிய பொழுதுகள்" படம்

கோபக்காரர்களை இணைத்த "களவாடிய பொழுதுகள்" படம்

Penulis : Antony on வியாழன், 9 டிசம்பர், 2010 | AM 9:52


"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
"களவாடிய பொழுதுகள்" படத்துக்காக பிரபு தேவா, படைப்பாளி தங்கர் பச்சான் இருவரும் இணைந்ததை இப்போதும் கோலிவுட்டில் ஆச்சர்யமாக பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

இரண்டு பேரும் கடுகடுவென எரிந்து விழுந்து கோபத்தை கொட்டுகிற பார்டிகளாம். 'தங்கரும் கோபக்காரர், நீங்களும் கோபக்காரர் எப்படி சேர்ந்து வேலை பார்த்தீர்கள்?'என்று பிரபுவிடம் கேட்டால், முதலில் இது உனக்கு சரி பட்டு வராது என்றார்கள்.

தங்கர் எதையும் படு 'ஹாட்டாக' விமர்சனம் செய்யக்கூடியவர் என்றாலும் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.எத்தனையோ நடிகர்களை விட்டு என்னை 'செலக்ட்' பண்ணியது ஏன்? என்று அவரிடம் கேட்டேன்.

நீதான் கமர்சியல் நடிகர் என பெயர் எடுத்திருக்கே.அதான் உன்னை கூப்பிட்டேன் என்றார்.டான்ஸ், மசாலா,கலகலப்பு, ஜாலி இதையும் மீறி பிரபு தேவாவுக்குள் இன்னொரு 'பரிணாமம்'இருக்கு என்பதையும் காட்டியுள்ளார்.

அதையும் சொன்னபடி எடுத்துள்ளார். அருமையாக வந்துள்ளது. நிச்சயம் எனக்கு இது வித்தியாசமான அனுபவம்தான்.

எனக்கு இருக்கிற கமர்சியல் இமேஜ் எல்லாத்தையும் கழட்டி வெச்சுட்டு நடித்திருக்கேன்.அவர் சீரியசாக படம் எடுத்தாலும்,ஜாலியான மனிதர்.படப்பிடிப்பில் ஒரே ஜாலிதான்.

களவாடிய பொழுதுகள் சீரியசான படமாக இருந்தாலும் கமர்சியலாக வெற்றி பெறும்.தங்கர் பச்சானும் ஒரு நடிகர்தான்.

அவரை என் டைரக்சனில் நடிக்க வைத்து 'பெண்ட'நிமிர்த்தி வேலை வாங்க வேண்டும் என்பது என் விருப்பம்' என்கிறார் பிரபு தேவா
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger