News Update :
Home » » கலவரக்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இளவரசர்

கலவரக்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இளவரசர்

Penulis : Antony on சனி, 11 டிசம்பர், 2010 | AM 3:05

நேற்று பள்ளடியம் நோக்கி சென்று கொண்டிருந்த இளவரசர் சார்லஸ் - காமில்லாவின் லிமோ காரை 20000 பேர் கொண்ட மாணவர் கும்பல் சுற்றி வளைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரினுள் இருந்த காமில்லா அதிர்ச்சியில் உறைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. நீண்ட நேரத்திற்கு பின் ஆயுதமேந்திய போலீசார் உதவியுடன் இளவரசரின் கார் அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இளவரசர் சார்லஸின் கார் சுற்றி வளைக்கப்பட்ட பின் அரச குடும்பத்திற்கான பாதுகாப்புப் பணியாளர்களின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது உயர்தர பாதுகாப்பு என்ற போது மாணவர்கள் ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் இளவரசரின் கார் அனுமதிக்கப்பட்டது எப்படி என்பது உள்ளிட்ட பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger