
வியட்னாம் நாட்டில் உள்ள வின்பெர்ல் தீவில் நேற்று மாலை, 2010-ம் ஆண்டுக்கான பூலோக அழகி போட்டி நடந்தது. இதில் உலகம் முழுவதும் இருந்து வந்த அழகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மேடையில் தோன்றி, அணிவகுத்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த போட்டியில் பூலோக அழகியாக பெங்களூரை சேர்ந்த 20 வயது அழகி நிகோலே பாரியா வெற்றி பெற்றார்.
அவர் அறிவு போட்டியிலும் வெற்றி பெற்றார்.
அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
முன்னதாக நடந்த அறிவு போட்டியில், நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் நிகோலே பாரியா பதில்களை அளித்தார்.
"எந்த போட்டியிலும் வெற்றி- தோல்வி பற்றி சிந்திக்கக் கூடாது. சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்படுவதே வெற்றிக்கு வழிகாட்டும்'' என்று அவர் பதில் அளித்தார்.
மற்றொரு கேள்விக்கு நிகோலே பதில் அளிக்கையில், "வியட்னாமில் இருப்பதை நான் பெருமையாக கொள்கிறேன். வியட்னாம் மிகவும் அழகான நாடு. இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றும் அவர் கூறினார்.
இதுபற்றி பெங்களூரில் உள்ள நிகோலேயின் தந்தை இயான் பாரியாவிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் மகிழ்ச்சியுடன், "எனது மகள் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படி அவர் தனது திறமையை காட்டி விட்டார்'' என்றார்.
கருத்துரையிடுக