தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் சற்று முன்னர் நிறைவடைந்தது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அரங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மு.பா.உ சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,
'வடக்கு கிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, வன்னி மாவட்டத்திற்கு புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கிழக்கிற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் கட்சிகளின் அரங்கம் சார்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவை 5 பேராக அதிகரிக்குமாரே அக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றார்
Home »
ஈழம்
» தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் சற்று முன்னர் நிறைவடைந்தது
தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பில் சற்று முன்னர் நிறைவடைந்தது
Penulis : Antony on வெள்ளி, 17 டிசம்பர், 2010 | PM 5:19
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக