News Update :
Home » , » இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாது

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாது

Penulis : Antony on சனி, 11 டிசம்பர், 2010 | PM 3:42

இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை என்றால் என்னவென்றே தெரியாதென முன்னை நாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சாடுகின்றார். மனிதவுரிமைகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் அரசியலில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது மனித உரிமைகளின் காவலனாக சித்தரிக்கப்படுகின்றவர்கள் தான் பின்னாளில் அதிகாரத்துக்கு வந்ததும் மனித உரிமைகளைத் தூக்கிப் போட்டு காலில் மிதிப்பவர்களாக மாறுகின்றார்கள்.

அத்துடன் இலங்கையின் எந்தவொரு ஆட்சியாளரும் சர்வதேச மனித உரிமைகள் சாசனம் பற்றித் தெரிந்தவர்கள் அல்ல. தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்களும் அல்ல. அதன் காரணமாக இலங்கை தவறான பாதையில் பயணிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

+ கருத்துகள் + 1 கருத்துகள்

11 டிசம்பர், 2010 அன்று PM 9:45

இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 12-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger