தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஷ் கிளையின் முக்கிய செயற்பாட்டாளர்களான ரகுபதி,குலம்,ஆல்பேர்ட்,அப்துல்லா,மற்றும் சிலர் சுவிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஷ் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
Basel-Stadt, Bern, Freiburg, Genf, Graubünden, Luzern, Solothurn, St. Gallen, Waadt und Zürich statt,போன்ற 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுவிஷ் பொலீசாரால் நடத்தப்பட்ட தேடுதலின் போதே குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான சிலர் மட்டுமே இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் விசாரணையின் பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் நாம் அறிகிறோம்.
தமிழீழ விடுதலை வேட்கையை வென்றெடுப்பதற்காக அரசியல் வழியில் போராட ஆரம்பித்துள்ள புலம்பெயர் மக்களை திசை திருப்புவதற்காகவும்,தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நெஞ்சில் இருத்தி தமிழீழ தனி நாட்டை மீட்டெடுப்பதற்காகவும் புலம்பெயர் தேசத்தில் அயராது பாடுபட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களை கைது செய்வதன் மூலம் தமிழீழ தனிநாட்டிற்கான அரசியல் போராட்டத்தையும் நசுக்கி விடலாம் என்று உலகநாடுகள் கருதுவதை கடந்த சில மாதங்களாக ஜரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவரும் மனிதாவிமான செயற்பாட்டாளர்களின் கைதுகள் நிரூபித்துள்ளன.
உறுதிப்படுத்தப்பட்ட விரிவான செய்தியை விரைவில் எதிர்பாருங்கள்................
கருத்துரையிடுக