
இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார். இலங்கையில் ராணுவத்தில் சிங்களர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ராணுவத்தில் தமிழர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோன்று பல்வேறு துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு 2-ந்தர குடிமக்களாக நடத்தப்பட்டதால்தான் அங்கு பிரச்சினை உருவானது. இந்த நிலையில் இலங்கையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார். பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று 3 வாரம் பயிற்சி அளிக்கப்படும். இது மாணவர்களின் போர்த் திறமையை அபிவிருத்தி செய்யும் பயிற்சியாக கருத வேண்டும். ராணுவப் பயிற்சியாகக் கருதக்கூடாது,
கருத்துரையிடுக