
இந்தச்சம்பவம் பற்றி தெரியவருவதாகவது
இன்று காலை மட்டக்களப்பில் இருந்து மோட்டார்சைக்கிளில் களுவாஞ்சிகுடிக்கு வந்த அவர் அங்கு தனது நண்பர் ஒருவரின் பிக்கப் வாகனத்தை பெற்றுக்கொண்டு படுவான்கரைக்கு சென்றுள்ளார்.
அங்கு வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட வெள்ளத்தினால் மூழ்கியுள்ள வேற்றுச்சேனை மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணிக்கு அங்கு வந்திருந்த களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி மாரப்பனவுடன் இணைந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை பழுகாமத்தில் உள்ள பாடசாலைகளில் தங்கவைத்துவிட்டு படுவான்கரை பிரசேத்க்குட்பட்ட அரசடித்தீவு முதலைக்குடா வில்லுக்குளம்போன்ற பகுதிகளுக்குச்சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பட்டிப்பளை பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு நிலைமைகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராசாவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
படுவான்கரையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
ஆதன் பின்னர் அங்கிருந்து பழுகாமம் வைத்தியசாலையில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக அழைத்துச்செல்லவிருந்த கர்ப்பிணிப்பெண்னையும் ஏற்றிக்கொண்டு பிக்கப் வாகனத்தில் பின்புறத்தில் நின்றவாறு பாராளுமன்ற உறுப்பினர் வந்துள்ளார்.
இந்த நிலையில் தாங்கள் செல்லும்போது குறைவான தண்ணீர் ஓட்டத்தில் இருந்த பட்டிருப்பு கோஸ்வையில் தாங்கள் திரும்பிவரும்போது தண்ணீர் அதிகமாக இருந்ததாகவும் சுமார் ஆறு அடிக்கு தண்ணீர் ஓட்டம் இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதன்போது தண்ணீருக்குள் தமது வாகனம் வரும்போது அவ்வாகனம் ஆற்றை நோக்கு இழுத்துச்செல்லப்படுவதை அவதானிக்ககூடியதாகவிருந்தது.
எனினும் சாரதியின் சமயோசிதம் காரணமாக அவர் அந்த வாகனத்தை சிறப்பான முறையில் செலுத்தி எம்மைக்காப்பாற்றினார் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட எருவில் ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறுகளுதாவளைகுறுக்கள்மடம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.






கருத்துரையிடுக