ஊமைப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய கடற்படையின் கொடூரம்: திருகோணமலை
Penulis : Antony on வியாழன், 20 ஜனவரி, 2011 | AM 8:38
வாய்பேச முடியாத ஊமைப் பெண்ணொருவர் திருகோணமலை மாவட்டத்தின் கிராமமொன்றில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையின் ரொட்டவெவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் எத்தாபெந்திவெவ எனும் கிராமத்தைச் சோ்ந்த ஊமைப்பெண்ணொருவரே கடற்படைச்சிப்பாய் ஒருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்பட்ட பெண் தற்போது திருமலை அரசினர் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கொடுத்த முறைப்பாட்டின் பே ரில் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச்சிப்பாய் நேற்று ரொட்டவெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக