News Update :
Home » » பாகிஸ்தான் வீரர்கள் சச்சினிடமிருந்து பாடம் கற்க வேண்டும்: ஜாவிட் மியாண்டாட்

பாகிஸ்தான் வீரர்கள் சச்சினிடமிருந்து பாடம் கற்க வேண்டும்: ஜாவிட் மியாண்டாட்

Penulis : Antony on செவ்வாய், 25 ஜனவரி, 2011 | AM 11:19


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்க வேண்டும் என அவ்வணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளருமான ஜாவிட் மியாண்டாட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஊடகங்களில் வாய்ச் சவால் விடுப்பதை விடுத்து போட்டிகளில் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சச்சின் டெண்டுல்கர் ஒரு திறமையான வீரர். அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி சதங்களை குவித்து வருகின்ற நிலையிலும் அவற்றைப் பற்றி ஊடகங்களில் பெரிதாக பாராட்டிக்கொள்வதில்லை. அவரிடம் இருந்து பல விடயங்களை நமது நாட்டு அணி கற்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger