
பொதுமக்கள் திட்டியதால் ஆத்திரப்பட்டு பெண் ஊராட்சி மன்றத்தலைவர் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கன்னி. இவரது கனவர் ராமச்சந்திரன்.
ஊரில் நடக்கும் குறைகளை அடிக்கடி மக்கள் இவரிடம் முறையிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும் முறையிட்டுள்ளார்கள்.
தண்ணீர் பிரச்சனை, மோட்டார் பிரச்சனை என்று சத்தம் போட்டு தங்களது குறைகளை ஊர்ப்பொதுமக்கள் சொல்லியுள்ளனர்.
ஊரார் திட்டியதை தாங்கிக்கொள்ளமுடியாத செல்வக்கன்னி இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கருத்துரையிடுக