News Update :
Home » » தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

Penulis : Antony on புதன், 12 ஜனவரி, 2011 | PM 2:29


தென் தமிழீழத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அவசர அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

தாயகத்தில் தென் தமிழீழத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு மிக அத்தியாவசியமாக அவசர உணவுப்பொருட்கள்/ உலர் உணவுப்பொருட்கள் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள், மற்றும் பாலுட்டும் உபகரணங்கள் பெண்களுக்குரிய மிக அத்திய அவசியப்பொருட்கள் தேவைப்படுகின்றன.

தொடர்ச்சியான மழையினால் தென் தமிழீழத்தில் பல பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தோடாமல் உள்ளதால் அப் பிரதேசங்கள் வெள்ளக்காடாக உள்ளன.

இதனால் கடைகள், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தியாக்குவதற்கே சிறு வள்ளங்களை பாவிக்கவேண்டி உள்ளது.

இம் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு புலத்தில் உள்ள அனைத்து மக்களும் முன் வாருங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

இவர்களுக்கு தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள அமைப்புக்கள் உதவி செய்துவருகின்றன.

உதவிகள் செய்ய விரும்புகின்றவர்கள் எம்முடன் தொடர்புகள் மேற்கொள்ளும் இடத்து அவர்களின் உதவி தென் தமிழீழத்தில் கடும் மழையினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.

"தென் தமிழீழ மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள்"

தொடர்புகளுக்கு.
பிரித்தானிய தமிழர் பேரவை
அலுவலகம்: 020 8808 0465
074 0475 9029
மின்னஞ்சல்: btfneedhelp@gmail.com




Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger