News Update :
Home » » தொடர்கிறது அடைமழை: 11 பேர் மரணம் - மூன்று பேரைக் காணவில்லை

தொடர்கிறது அடைமழை: 11 பேர் மரணம் - மூன்று பேரைக் காணவில்லை

Penulis : Antony on திங்கள், 7 பிப்ரவரி, 2011 | AM 10:52

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் மரணமடைந்துள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை வெள்ளம் காரணமாக 3 இலட்சத்து 20ஆயிரத்து 408 பேர் 759 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 11ஆயிரத்து 471 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

திருகோணமலை, மட்;டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger