News Update :
Home » » யுத்தத்திற்கு வழிவகுத்த தவறுகளை இலங்கை கருத்திற்கொண்டுள்ளது

யுத்தத்திற்கு வழிவகுத்த தவறுகளை இலங்கை கருத்திற்கொண்டுள்ளது

Penulis : Antony on திங்கள், 7 பிப்ரவரி, 2011 | AM 10:58


நாட்டைத் துண்டிப்பதற்கான ஆயுதமேந்திய நீண்ட கால பிரிவினைவாதத்தை வெற்றி கொண்டமை குறித்து இலங்கை பெருமையடைகிறது. ஆனால் 30 வருட கால யுத்தத்திற்கு வழி வகுத்த கடந்த கால தவறுகள், இடைவெளிகள் முரண்பாடுகள் குறித்தும் இலங்கை கவனம் செலுத்துகிறது என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தையும் பாரியளவிலான வன்முறைகளையும் நிரந்தர சமாதானமாக மாற்றும் சிக்கலானதும் கடினமானதுமான செயற்பாட்டில் இலங்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சமாதானம் மக்களின் மனதிலேயே கட்டியெழுப்பப்பட முடியும். அது நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்பனவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் கலாநிதி ஜயதிலக கூறினார்.

பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 63 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ் வைபவத்தில் இந்தியா, கியூபா, வெனிசுலா, ஜப்பான், நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜேர்மனி, வத்திக்கான், ஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கெமரூன், செனகல், கஸகஸ்தான், வியட்நாம், குவைத் ஆகிய நாடுகளின் பதில் தூதுவர்கள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger