
நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்? என்னும் தலைப்பில் நாளை 04-02-2011 வெள்ளிக் கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றினை 'நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மையம்' என்னும் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெறும் இக்ககருந்தரங்ககில் அறிமுக உரையை தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தை சேர்நத தியாகு நிகழ்த்துகிறார். கருத்துரைகளை கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், ஊடகவியலாளர் அய்யநாதன், மருத்துவர் எழிலன் ஆகியோர் வழங்குகின்றனர்.
ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் செயல்பட்டுவரும் இவ்வமைப்பானது தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டிலும் தனது பரப்புரைப் பணிகளை தொடக்கி உள்ளது.



கருத்துரையிடுக