News Update :
Home » » மக்களுக்கு உதவ புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் - முரளிதரன்

மக்களுக்கு உதவ புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் - முரளிதரன்

Penulis : Antony on வியாழன், 3 பிப்ரவரி, 2011 | PM 1:26


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி திருப்தியளிக்கும் விதத்தில் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள மக்கள் ஓடிவந்து கோடிக்கணக்கான காசுகளை செலவளித்து உதவிகளை வழங்கியுள்ள போதிலும் எமது புலம்பெயர் மக்களினதோஅமைப்புகளினதோ உதவிகள் ஒழுங்காகவந்து சேரவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger