News Update :
Home » , » இந்திய கடற்படைக்கு சிறிலங்காவின் போர்ப்படகுகள் – உடன்பாடு கையெழுத்தானது

இந்திய கடற்படைக்கு சிறிலங்காவின் போர்ப்படகுகள் – உடன்பாடு கையெழுத்தானது

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011 | AM 11:20


சிறிலங்காவிடம் இருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

இந்தியக் கடற்படையில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாகர் பிரஹாரி பால் என்ற சிறப்புப் படைப்பிரிவுக்காகவே இந்தப் படகுகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

250 கோடி ரூபா பெறுமதியான இந்த உடன்பாட்டு கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சந்தேகத்துக்கிடமான கப்பல்கள், படகுகளை வழிமறித்தல், மற்றும் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவதற்கே இந்தப் படகுகளை இந்தியா பயன்படுத்தவுள்ளது.

இந்தப் படகுகள் சிறிலங்காவின் சோலாஸ் மரைன் நிறுவனம் 36 மாதங்களுக்கள் கட்டிக் கொடுக்கவுள்ளது.

கடற்புலிகளின் போர்த்தந்திரங்களை அடியொற்றி சிறிலங்கா கடற்படை உருவாக்கியிருந்த சிறப்புப் படகுப் படையணியை முன்னுதாரணமாகக் கொண்டே இந்தியா சாகர் பிரஹாரி பால் என்ற இந்தப் படைப்பிரிவை உருவாக்கியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படகு அணியை சேர்ந்த 42 கொமாண்டோக்கள் சில மாதங்களுக்கு முன்னர் மும்பைக்குச் சென்று இந்திய கடற்படையினருடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger