
சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்களில் முன் நிறுத்துவது இயலாது என இந்திய மத்திய அரசின் சார்பாக நேற்று வாதிடப்பட்டுள்ளது.கடந்த 1986 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்த வழக்கில் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மேலதிக நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.
இவ் வழக்கு விசாரணைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் எனக்கோரும் பொது நலமனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, அவர் ஒரு நாட்டின் அமைச்சர் என்ற முறையில் இராஜதந்திர ரீதியான சட்டபாதுகாப்பு இருப்பதாக அரசு தலைமை வழக்கஞர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது நல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் (எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி) ஒன்று அமுலில் இருந்தும், 1994 ஆம் ஆண்டிலேயே தேடப்படும் குற்றவாளி என டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டும் அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.
அவர் பின்னர் அமைச்சரான பிறகு, இந்தியா வந்து போயிருக்கிறார். இந்திய பிரதமரை சந்தித்தும் இருக்கிறார். இந்திய அரசு சட்டத்தை அமுல்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குறை கூறினார்.
எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீடி என்பது தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்த ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த இந்திய இலங்கை ஒப்பந்தம், தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பின், மேல் விசாரணை வேறு ஒரு டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
home



Home
கருத்துரையிடுக