குமரன் பத்மநாதனாகிய கே.பி கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு 600 வங்கிக் கணக்குகளும், 15 கப்பல்களும் இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் கூட இவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று ஜே.வி.பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதை ஒடுக்கும் சமவாய திருத்தச் சட்டப் பிரேரணை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியினால் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிதி புலனாய்வுத்துறை உண்மையாக இருந்திருந்தால் புலிகளின் சொத்து விபரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
home



Home
கருத்துரையிடுக