News Update :
Home » » விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.

Penulis : ۞உழவன்۞ on சனி, 29 அக்டோபர், 2011 | AM 5:03

சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவில் உள்ள பற்றாலியன்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும், கடந்தகாலத்தில் ஏற்பட்டது போன்ற சூழல் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்குமே இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

“ பலமானதும் உறுதித்தன்மை கொண்டதுமான புலனாய்வு வலையமைப்பை நாம் கொண்டிருந்தால், உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதில்லை.

எவரிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தாலும், எமது வலைமையப்பு பலமாக இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர் சமூகத்தின் சில சக்திகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.

கடந்தகாலத்தில் எதிர்கொண்டது போன்ற சூழலை நாம் விரும்பவில்லை.

இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு றெஜிமென்ட் தளபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியாக பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களை நிறுத்தியுள்ளோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களின் ஆட்பலம் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger