News Update :
Home » » தமிழீழத்தினை பெற்றுக் கொடுக்க பராக் ஒபாமா முயற்சி

தமிழீழத்தினை பெற்றுக் கொடுக்க பராக் ஒபாமா முயற்சி

Penulis : Antony on புதன், 4 ஏப்ரல், 2012 | AM 7:28


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக முறியடித்துள்ளார் என அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நிறைவேற்றிக் கொள்ள முடியாதவற்றை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவைக் கொண்டு நிறைவேற்றி கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற விவாத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளை அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் நாட்டை ஆட்சிப் பொறுப்பை கைப்பற்ற சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger