யாழில் இளம் யுவதிகளை காணவில்லை! பெற்றோர் முறைப்பாடு.
Penulis : ۞உழவன்۞ on சனி, 26 மே, 2012 | AM 11:41
யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர் இன்று சனிக்கிழமை மாலை யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ். ஆரியாலை ஆசீர்வாதம் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேந்திரன் ஜெயசுகந்தினி மற்றும் யாழ். கொட்டியைச் சேர்ந்த 25 வயதுடைய தம்பிரத்தினம் சுவர்ணநந்தின ஆகிய இரு யுவதிகளே காணமற் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்ட்டள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேர தெரிவித்தார்.
குறித்த இரு யுவதிகளும் நேற்று தொடக்கம் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது. காணமற்போன யுவதிகளில் ஒருவரான நாகேந்திரன் ஜெயசுகந்தினி பத்து பவுன் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி சமன் சிகேர மேலும் தெரிவித்தார்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக