News Update :
Home » » மன்னார் நகருக்கு வரும் பெண்கள் மீது பாலியல் கெடுபிடி!

மன்னார் நகருக்கு வரும் பெண்கள் மீது பாலியல் கெடுபிடி!

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 24 ஏப்ரல், 2012 | PM 2:39

மன்னார் நகர்ப் பகுதியில் சில முச்சக்கர வண்டி சாரதிகள் மீள்குடியேற்ற பகுதிகளிலிருந்து மாலை நேரங்களில் மன்னாருக்கு வரும் இளம் பெண்களைத் தமது முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகர் பகுதியில் 200 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் ஒரு சிலர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதால் அந்தச் சேவையிலீடுபடும் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; மன்னார் நகருக்கு தற்போது நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மீள்குடியேற்ற கிராம மக்களும் மன்னாருக்கு அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தமது நண்பர்களுடன் நகர் பகுதியில் அலைந்து திரிகின்றனர். சில யுவதிகளுடன் இவர்கள் கதைத்து தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றனர். பின் இவர்கள் மன்னார் வந்தால் இவர்களுடன் கதைத்து தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் மாலை நேரங்களில் பெண்கள் மன்னாருக்கு வந்து தூர இடங்களுக்குச் செல்ல முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி செல்கின்றனர். இதன்போது தனியாக பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் செல்லும் போது இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதியாக இருந்தால் தனது நண்பர் ஒருவரையும் கூட ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதன் போது, ஆட்டோவில் செல்லும் பெண்களுடன் அங்கச் சேட்டையில் ஈடுபடுதல், கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனினும் இதுபோன்ற சம்பவங்களை சில பெண்கள் அச்சத்தின் காரணமாக வெளியில் கூறுவதில்லை. இந்தச் செயலில் ஈடுபடும் இளைஞர் குழு தமிழ், முஸ்லிம் வேறுபாடின்றி செயற்படுகின்றது. ஆனால், பாதிக்கப்படும் அனைத்து பெண்களும் தமிழ் பெண்கள். மன்னாரில் முச்சக்கர வண்டி சங்கம் இருந்தும் கூட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காத நிலையில் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதியை வழங்கியுள்ளது. இதனால் இவ்வாறான சமூகச் சீர் கேட்டில் ஈடுபடும் இந்த முச்சக்கர வண்டி சாரதிகள் இரவு பகல் பாராது பஸார் பகுதியில் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் இவர்கள் முச்சக்கர வண்டியிலேயே உறங்கியும் விடுகின்றனர். இந்தச் செயற்பாடுகளுடன் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளை ஏனைய சாரதிகள் அடையாளம் கண்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவில்லாத சிலர் இரவு நேரத்தில் அப்பகுதியில் நுழைந்து சமூகச் சீர் கேட்டில் ஈடுபடுகின்றனர். அவர்களையும் சக முச்சக்கர வண்டிச் சாரதிகள் அவதானித்து உரிய நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு மன்னாரில் நடக்கும் அவலங்களை தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger